ஒளிந்து கொண்டிருக்கும்
கவிதைக்குள்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கும்
கவிதை
கண்டெடுப்பது
எக்காலம்
Saturday, December 26, 2009
Friday, December 25, 2009
Saturday, December 19, 2009
Friday, December 18, 2009
இன்றும் நானும்
இன்று
நான்
எதுவும்
எழுத இல்லை
இன்றும்
என்னை
எழுத
வைக்கவில்லை
இன்றும் நானும்
மொழியற்று
எழுத்தற்று
எதுவுமற்று
நான்
எதுவும்
எழுத இல்லை
இன்றும்
என்னை
எழுத
வைக்கவில்லை
இன்றும் நானும்
மொழியற்று
எழுத்தற்று
எதுவுமற்று
Tuesday, December 15, 2009
Sunday, December 13, 2009
Friday, December 11, 2009
Wednesday, December 9, 2009
கேள்விகள்
என்னைக் கேள்விகள்
கேட்டுக் கொண்டே
இருந்தீர்கள்
கேள்விகளுக்குள்
நுழைந்து போய்
பார்த்த போது
உள்ளீடற்ற உங்கள்
உருவம் தெரிந்தது
ஒரு புன்முறுவலோடு
வெளியே வந்து
பார்க்க
நீங்கள் இருந்த இடத்தில்
எறும்பு அளவுக்கு ஒரு
கேள்வி இருந்தது
துடித்தபடி
கேட்டுக் கொண்டே
இருந்தீர்கள்
கேள்விகளுக்குள்
நுழைந்து போய்
பார்த்த போது
உள்ளீடற்ற உங்கள்
உருவம் தெரிந்தது
ஒரு புன்முறுவலோடு
வெளியே வந்து
பார்க்க
நீங்கள் இருந்த இடத்தில்
எறும்பு அளவுக்கு ஒரு
கேள்வி இருந்தது
துடித்தபடி
Tuesday, December 1, 2009
நம்மவன்
துடைக்க மனமின்றி
உன் கண்ணீரை
இந்த பாட்டிலில்
நிரப்பிக்கொள் என்று
தருபவனிடமிருந்து வாங்கி
அதை உடைத்து
அவன் முகத்தைக் கீறி
சிந்தும் ரத்தத்தை
உன் கைகளில்
ஏந்திக்கொள்
எனச் சொல்லிவிட்டுப் போகிறவன்
சொரணை இழக்காத நம்மவன்
உன் கண்ணீரை
இந்த பாட்டிலில்
நிரப்பிக்கொள் என்று
தருபவனிடமிருந்து வாங்கி
அதை உடைத்து
அவன் முகத்தைக் கீறி
சிந்தும் ரத்தத்தை
உன் கைகளில்
ஏந்திக்கொள்
எனச் சொல்லிவிட்டுப் போகிறவன்
சொரணை இழக்காத நம்மவன்
புத்திசாலி
அதை
புத்திசாலி மீன் என்று
ஒத்துக் கொண்டேன்
வாயைத் திறந்து
தின்று கொண்டிருந்த
தூண்டிலைக் காட்டியபோது
புத்திசாலி மீன் என்று
ஒத்துக் கொண்டேன்
வாயைத் திறந்து
தின்று கொண்டிருந்த
தூண்டிலைக் காட்டியபோது
Saturday, November 28, 2009
Wednesday, November 25, 2009
Tuesday, November 24, 2009
இரண்டு கதைகள்
இரண்டு கதைகள் இருக்கிறது
ஒன்று
கண்ணீரை வரச்செய்யும்
இன்னொன்று
சிரிப்பை வரச்செய்யும்
எந்த கதை
உங்களுக்கு வேண்டும்
எனக்கு வேண்டும்
கண்ணீரை நிறுத்தி
சிரிப்பை தொடரச்
செய்யும் கதை
ஒன்று
கண்ணீரை வரச்செய்யும்
இன்னொன்று
சிரிப்பை வரச்செய்யும்
எந்த கதை
உங்களுக்கு வேண்டும்
எனக்கு வேண்டும்
கண்ணீரை நிறுத்தி
சிரிப்பை தொடரச்
செய்யும் கதை
Saturday, November 21, 2009
தேநீர் உரையாடல்
தேநீர் அருந்திய
நேரத்துக்குள்
பேசி முடித்தோம்
நம் உரையாடலில்
இருந்தன
இன்னும் தேநீருக்கான
நேரங்கள்
நேரத்துக்குள்
பேசி முடித்தோம்
நம் உரையாடலில்
இருந்தன
இன்னும் தேநீருக்கான
நேரங்கள்
Wednesday, November 18, 2009
Saturday, November 14, 2009
சருகு
இந்த இடத்தில்
உதிர்ந்து கிடக்கும் சருகு
உயிர்த்தெழுந்து
மரமாகி
இடத்தை அடைக்கிறது
விழவிடாத
சருகுகளோடு காற்றில்
உரையாடுகிறது
மகிழ்கிறது
மீண்டும் சருகாகி
நிகழ்ந்ததை
நினைத்துப் பார்க்கிறது
காற்றில் படபடக்கிறது
கால்பட்டு
இறந்து போகிறது
உதிர்ந்து கிடக்கும் சருகு
உயிர்த்தெழுந்து
மரமாகி
இடத்தை அடைக்கிறது
விழவிடாத
சருகுகளோடு காற்றில்
உரையாடுகிறது
மகிழ்கிறது
மீண்டும் சருகாகி
நிகழ்ந்ததை
நினைத்துப் பார்க்கிறது
காற்றில் படபடக்கிறது
கால்பட்டு
இறந்து போகிறது
Monday, November 9, 2009
Sunday, November 8, 2009
இறந்துபோனவர்களின் நகரம்
எல்லோரும்
இறந்துபோன நகரத்தில்
சுற்றிக் கொண்டிருக்கிறேன்
மரண வாசனை
நின்றபாடில்லை
நீ எப்போது
இறந்து போவாய்
காலடியில் தட்டுப்பட்ட
ஒரு உடல் கேட்கிறது
நடுங்கச் செய்கின்றன
சாவின் பிம்பங்கள்
முடியாத அழுகுரல்களும்
தோள் வந்து அமரும்
பச்சைக்கிளி புன்னகைத்து
ஓடிப் போனது
எல்லோரும்
இறந்துபோன நகரத்திலிருந்து
வெளியேறிக் கொண்டிருந்தேன்
மரணத்தைப்
போட்டு விட்டு
இறந்துபோன நகரத்தில்
சுற்றிக் கொண்டிருக்கிறேன்
மரண வாசனை
நின்றபாடில்லை
நீ எப்போது
இறந்து போவாய்
காலடியில் தட்டுப்பட்ட
ஒரு உடல் கேட்கிறது
நடுங்கச் செய்கின்றன
சாவின் பிம்பங்கள்
முடியாத அழுகுரல்களும்
தோள் வந்து அமரும்
பச்சைக்கிளி புன்னகைத்து
ஓடிப் போனது
எல்லோரும்
இறந்துபோன நகரத்திலிருந்து
வெளியேறிக் கொண்டிருந்தேன்
மரணத்தைப்
போட்டு விட்டு
Saturday, November 7, 2009
Monday, November 2, 2009
Sunday, November 1, 2009
Saturday, October 31, 2009
உனது பதிலில்...
நீ கண்ணீரை மட்டும்
வரைந்தாய்
இது
எந்த கண்களின் கண்ணீர்
கேட்டேன்
சிரித்தபடியே சொன்னாய்
கண்கள் இருந்தால்தான்
கண்ணீர் வர வேண்டுமா
வரைந்தாய்
இது
எந்த கண்களின் கண்ணீர்
கேட்டேன்
சிரித்தபடியே சொன்னாய்
கண்கள் இருந்தால்தான்
கண்ணீர் வர வேண்டுமா
குழந்தையிடமிருந்து...
குழந்தையின் உதட்டில்
சிரிக்கிறது சொர்க்கம்
குழந்தையின் கண்களில்
வழிகிறது பிரபஞ்சம்
சிரிக்கிறது சொர்க்கம்
குழந்தையின் கண்களில்
வழிகிறது பிரபஞ்சம்
Sunday, October 25, 2009
எவ்வளவோ தெரியுது
அப்பாவும் மகனும்
பார்த்துக் கொண்டிருந்தனர்
தந்தை திரும்ப திரும்ப
சொன்னார்
இங்கிருந்து பார் என்று
ஆச்சர்யத்தை நிறுத்தி
அப்பா சொன்னபடி செய்தான்
பிறகு சொன்னான்
அப்பா நீங்க சொன்னபடி பாத்தா
எனக்கு நீங்கதான் தெரியிறீங்க
என்படி பாத்தா
எவ்வளவோ தெரியுது
பார்த்துக் கொண்டிருந்தனர்
தந்தை திரும்ப திரும்ப
சொன்னார்
இங்கிருந்து பார் என்று
ஆச்சர்யத்தை நிறுத்தி
அப்பா சொன்னபடி செய்தான்
பிறகு சொன்னான்
அப்பா நீங்க சொன்னபடி பாத்தா
எனக்கு நீங்கதான் தெரியிறீங்க
என்படி பாத்தா
எவ்வளவோ தெரியுது
Friday, October 23, 2009
கேட்க முடியும்
நீங்கள்
ரத்தத்தை மட்டுமே
வரைந்து பார்க்கும் போது
துளிகளின் துல்லியத்தில்
உங்களால்
கேட்க முடியும்
மரணத்தின் குரலையும்
ரத்தத்தை மட்டுமே
வரைந்து பார்க்கும் போது
துளிகளின் துல்லியத்தில்
உங்களால்
கேட்க முடியும்
மரணத்தின் குரலையும்
Saturday, October 17, 2009
Wednesday, October 14, 2009
Saturday, October 10, 2009
மற்றும் பலர்
அந்த படத்தில் நடித்த
மற்றும் பலரில்
நானும் ஒருவன் என்றார்
இடைவேளையில்
தேநீர் அருந்திய ஒருவர்
மற்றவரிடம்
மற்றும் பலரில்
நானும் ஒருவன் என்றார்
இடைவேளையில்
தேநீர் அருந்திய ஒருவர்
மற்றவரிடம்
Thursday, October 8, 2009
Wednesday, October 7, 2009
Monday, October 5, 2009
Friday, October 2, 2009
காளீ
குழந்தையிடமிருந்து திரும்பி
தன் பக்கம்
படுக்கச் சொல்கிறான் கணவன்
தன் பக்கம்
இழுக்கிறது குழந்தை
நடுநிசியை முகர்ந்தபடி
இரண்டுமாகிறாள்
காளீ
தன் பக்கம்
படுக்கச் சொல்கிறான் கணவன்
தன் பக்கம்
இழுக்கிறது குழந்தை
நடுநிசியை முகர்ந்தபடி
இரண்டுமாகிறாள்
காளீ
Sunday, September 27, 2009
எல்லோரும் எழுதும் கவிதை
எல்லாவற்றையும்
உன் மெளனத்தில்
மொழிபெயர்கிறாய்
உன் மெளனத்தை எதில்
மொழிபெயர்ப்பாய்
உன் மெளனத்தில்
மொழிபெயர்கிறாய்
உன் மெளனத்தை எதில்
மொழிபெயர்ப்பாய்
Tuesday, September 22, 2009
பார்க்காமல் போகிறீர்கள்
உங்கள் காலடியில்
ஒரு பென்சில் கிடக்கிறது
பார்க்காமல் போகிறீர்கள்
உங்கள் காலடியில்
ஒரு சாக்லெட் கிடக்கிறது
பார்க்காமல் போகிறீர்கள்
உங்கள் காலடியில்
ஒரு முகவரி
ஒரு வானவில்
ஒரு மலர்
பார்க்காமல் போகிறீர்கள்
உங்கள் காலடியில்
ஒரு பாதை
ஒரு கவிதை
ஒரு வானம்
ஒரு உயிர்
எதையும்
பார்க்காமல் போகிறீர்கள்
உங்கள் காலடியில்
நீங்கள் கிடக்கிறீர்கள்
பார்க்காமல் போகிறீர்கள்
ஒரு பென்சில் கிடக்கிறது
பார்க்காமல் போகிறீர்கள்
உங்கள் காலடியில்
ஒரு சாக்லெட் கிடக்கிறது
பார்க்காமல் போகிறீர்கள்
உங்கள் காலடியில்
ஒரு முகவரி
ஒரு வானவில்
ஒரு மலர்
பார்க்காமல் போகிறீர்கள்
உங்கள் காலடியில்
ஒரு பாதை
ஒரு கவிதை
ஒரு வானம்
ஒரு உயிர்
எதையும்
பார்க்காமல் போகிறீர்கள்
உங்கள் காலடியில்
நீங்கள் கிடக்கிறீர்கள்
பார்க்காமல் போகிறீர்கள்
Sunday, September 20, 2009
சதுரங்க வார்த்தைகள்
இந்த முறையும்
நம் உரையாடல் முடியும் தருவாயில்
உன் ஒரு புதிர்
என்னால் அவிழ்க்க முடியவில்லை
நீ ஆழமாகப் பார்க்கிறாய்
கேட்க வேண்டாம் என்று கிளம்புகிறேன்
தூறல் என் பதட்டத்தைக் குறைக்கிறது
உன் புதிரை ஆராய விரும்பவில்லை
புதிருக்குள் ஓடிப்போய்
எதையும் கண்டெடுக்கத் தீவிரப்படவில்லை
சிலவற்றைத் தெரிந்து கொள்ளாமல்
இருப்பதே நல்லது
உன் சதுரங்க வார்த்தைகளில்
நாளையும் விளையாடுவாய்
வேறு புதிர்களோடு முடிப்பாய்
நம் நட்பு இன்னும் சாத்தியப்படலாம்
நீயே புதிராக ஆகாதவரை
நம் உரையாடல் முடியும் தருவாயில்
உன் ஒரு புதிர்
என்னால் அவிழ்க்க முடியவில்லை
நீ ஆழமாகப் பார்க்கிறாய்
கேட்க வேண்டாம் என்று கிளம்புகிறேன்
தூறல் என் பதட்டத்தைக் குறைக்கிறது
உன் புதிரை ஆராய விரும்பவில்லை
புதிருக்குள் ஓடிப்போய்
எதையும் கண்டெடுக்கத் தீவிரப்படவில்லை
சிலவற்றைத் தெரிந்து கொள்ளாமல்
இருப்பதே நல்லது
உன் சதுரங்க வார்த்தைகளில்
நாளையும் விளையாடுவாய்
வேறு புதிர்களோடு முடிப்பாய்
நம் நட்பு இன்னும் சாத்தியப்படலாம்
நீயே புதிராக ஆகாதவரை
இமைக்கும் நேரத்தில்
கண் இமைக்கும் நேரத்தில்
உன்னைப் பற்றி
எழுத வைக்கிறாய்
கண் இமைக்காமல் அதை
நீண்ட நேரம்
படிக்க வைக்கிறாய்
உன்னைப் பற்றி
எழுத வைக்கிறாய்
கண் இமைக்காமல் அதை
நீண்ட நேரம்
படிக்க வைக்கிறாய்
Saturday, September 19, 2009
உனக்குத் தெரியாமல்
வரத்துடித்த
நொடி உணர்ந்து
சமாளித்து
உன்முன்
புன்னகை செய்து
எதையோ எடுப்பதுபோல்
சற்றுத் தள்ளிப்போய்
துடைக்கிறேன் கண்ணீரை
உனக்குத் தெரியாமல்
துடைத்த கண்ணீரிலிருந்து
பார்க்கின்றன
உன் விழிகள்
என்ன சொல்வதென்று
தெரியாமல்
நொடி உணர்ந்து
சமாளித்து
உன்முன்
புன்னகை செய்து
எதையோ எடுப்பதுபோல்
சற்றுத் தள்ளிப்போய்
துடைக்கிறேன் கண்ணீரை
உனக்குத் தெரியாமல்
துடைத்த கண்ணீரிலிருந்து
பார்க்கின்றன
உன் விழிகள்
என்ன சொல்வதென்று
தெரியாமல்
குழந்தைகள்
கை நீட்டிச் சேமிக்கிறது
குழந்தையின் கையில்
குழந்தை மழை
---
பூக்களைக் கிள்ளி எறிகிறது குழந்தை
அம்மா பார்த்துத் திட்டுகிறாள்
பூப்போல் சிரிக்கிறது குழந்தை
---
அம்மாவின் புடவைக்குள்
ஒளிந்து கொண்ட குழந்தை
பேசிப்பார்க்கிறது
அம்மாவைப்போல
---
குழந்தையின் கையில்
குழந்தை மழை
---
பூக்களைக் கிள்ளி எறிகிறது குழந்தை
அம்மா பார்த்துத் திட்டுகிறாள்
பூப்போல் சிரிக்கிறது குழந்தை
---
அம்மாவின் புடவைக்குள்
ஒளிந்து கொண்ட குழந்தை
பேசிப்பார்க்கிறது
அம்மாவைப்போல
---
Tuesday, September 15, 2009
இருளின் சுகம்
மொத்தமாய் இருள்
பிரித்து பிரித்து வைத்து
கடக்க ஆரம்பித்தேன்
இடையிடையே
வந்து போனது வெளிச்சம்
இருளின் சுகத்தை
உணர்ந்து நடந்தன கால்கள்
பிரித்து பிரித்து வைத்து
கடக்க ஆரம்பித்தேன்
இடையிடையே
வந்து போனது வெளிச்சம்
இருளின் சுகத்தை
உணர்ந்து நடந்தன கால்கள்
ஒத்திகைக் குறத்தி
அரங்கேற்றம்
செய்யச் சொல்லி
அவசரப்படுத்தி
மேடையை நோக்கித்
தள்ளி விடுகிறாள்
ஒத்திகைக் குறத்தி
செய்யச் சொல்லி
அவசரப்படுத்தி
மேடையை நோக்கித்
தள்ளி விடுகிறாள்
ஒத்திகைக் குறத்தி
Saturday, September 12, 2009
Friday, September 11, 2009
Wednesday, September 9, 2009
கண்ணாடி வண்ணத்துப்பூச்சி
கண்ணாடி வண்ணத்துப்பூச்சி
பறக்கிறது கம்யூட்டரிலிருந்து
ஈமெயில்களைக் கொறித்தபடி
பறக்கிறது கம்யூட்டரிலிருந்து
ஈமெயில்களைக் கொறித்தபடி
Tuesday, September 8, 2009
குழந்தையின் பொம்மை
மறந்து வந்த குழந்தை
அம்மாவிடம் கவலைப்படுகிறது
வீட்டில் தனியாக
விட்டு வந்த பொம்மைப் பற்றி
அம்மாவிடம் கவலைப்படுகிறது
வீட்டில் தனியாக
விட்டு வந்த பொம்மைப் பற்றி
Friday, September 4, 2009
Monday, August 31, 2009
வெள்ளைக் காகிதம்
நீ எதுவும் எழுதாமல்
அனுப்பி இருக்கும்
வெள்ளைக் காகிதத்தில்
என்னைப் பார்த்து
புன்னகைக்கும் உன் முகம்
குறும்புடன்
அனுப்பி இருக்கும்
வெள்ளைக் காகிதத்தில்
என்னைப் பார்த்து
புன்னகைக்கும் உன் முகம்
குறும்புடன்
Sunday, August 30, 2009
ஓடு
ஓடுவது உனக்குப் பிடிக்கிறதா
கால்களிடம் கேட்டேன்
நிற்கும் போது ஓடுவதைப் பற்றி
யோசிப்பதும் பிடிக்கும் என்றது
கால்களிடம் கேட்டேன்
நிற்கும் போது ஓடுவதைப் பற்றி
யோசிப்பதும் பிடிக்கும் என்றது
Thursday, August 27, 2009
Wednesday, August 26, 2009
இந்த கவிதை
இந்த கவிதையை
நான் எழுதாவிட்டாலும்
அது இருக்கும்
உங்கள் இசையில் ஒரு பாட்டாக
அவர் வண்ணத்தில் ஒரு ஓவியமாக
இவர் நடனத்தில் ஒரு அசைவாக
மற்றும் பலவாக
என் மெளனத்தில்
இன்னும் நிசப்தமாக
நான் எழுதாவிட்டாலும்
அது இருக்கும்
உங்கள் இசையில் ஒரு பாட்டாக
அவர் வண்ணத்தில் ஒரு ஓவியமாக
இவர் நடனத்தில் ஒரு அசைவாக
மற்றும் பலவாக
என் மெளனத்தில்
இன்னும் நிசப்தமாக
நான்கு கவிதைகள்
வண்ணங்கள் புன்னகைக்க
அழும் பெண் ஓவியத்தில்
கண்ணீரைத் தீட்டும் கலைஞன்
----
நீந்தத் தெரியாதவன்
பார்த்தபடி
நதி நீந்துவதை
---
இருட்டை உண்டு
கொழுக்கும் பயம்
கைப்பற்றப் பார்க்கும் பகலையும்
---
மரத்திலிருந்து
உதிர்கிறது பூ
மரத்தை சுமந்தபடி
---
அழும் பெண் ஓவியத்தில்
கண்ணீரைத் தீட்டும் கலைஞன்
----
நீந்தத் தெரியாதவன்
பார்த்தபடி
நதி நீந்துவதை
---
இருட்டை உண்டு
கொழுக்கும் பயம்
கைப்பற்றப் பார்க்கும் பகலையும்
---
மரத்திலிருந்து
உதிர்கிறது பூ
மரத்தை சுமந்தபடி
---
Monday, August 24, 2009
பேருந்தில்...
ஓடும் பேருந்தில்
நேரெதிரில் அமர்ந்திருக்கும்
பெண்ணுக்கும் அவனுக்கும்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
இன்னொரு பயணம்
நேரெதிரில் அமர்ந்திருக்கும்
பெண்ணுக்கும் அவனுக்கும்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
இன்னொரு பயணம்
Thursday, August 20, 2009
பெயர்
பள்ளி விட்டு நீண்ட தூரம்
நடந்து வந்த சிறுவன்
நின்றிருக்கும்
தூசிப் படிந்த காரில்
எழுதிப் பார்க்கிறான்
தன் பெயரை
நடந்து வந்த சிறுவன்
நின்றிருக்கும்
தூசிப் படிந்த காரில்
எழுதிப் பார்க்கிறான்
தன் பெயரை
நடந்தும் கடந்தும்
நடந்து நடந்து போனாலும்
குறைவதில்லை தூரம்
கடந்து கடந்து முடித்தாலும்
முடிவதில்லை பயணம்
குறைவதில்லை தூரம்
கடந்து கடந்து முடித்தாலும்
முடிவதில்லை பயணம்
கேள்
முதுமைப் பற்றி எழுத
தாத்தாவிடம் குறிப்புகள்
கேட்டான் பேரன்
யாராவது முதியவர்களிடம் கேள்
சொல்லியபடியே
வேகமானர் அவர்
தாத்தாவிடம் குறிப்புகள்
கேட்டான் பேரன்
யாராவது முதியவர்களிடம் கேள்
சொல்லியபடியே
வேகமானர் அவர்
Sunday, August 16, 2009
பொம்மை
முப்பது வருடங்களுக்கு முன்
நான் உடைத்த
பொம்மையின் ஒரு பகுதியை
இன்னும் பாதுகாத்து வருகிறாள் அம்மா
ஒரு பொம்மையைப் போல
நான் உடைத்த
பொம்மையின் ஒரு பகுதியை
இன்னும் பாதுகாத்து வருகிறாள் அம்மா
ஒரு பொம்மையைப் போல
Saturday, August 15, 2009
கிருஷ்ண ஜெயந்தி
எல்லா பிளாட்டிலும்
கிருஷ்ணரின் காலடித் தடங்கள்
எந்த வீட்டிற்கு
வந்து போனார் எனத்
தெரியவில்லை
கிருஷ்ணரின் காலடித் தடங்கள்
எந்த வீட்டிற்கு
வந்து போனார் எனத்
தெரியவில்லை
Thursday, August 6, 2009
Thursday, July 30, 2009
Sunday, July 26, 2009
சிறுமியின் ஊர்தி
ரயில் வரைந்த காகிதத்தில்
கப்பல் செய்த சிறுமி
மழை நீரில் விட்டு
எல்லோருக்கும் காட்டி
சந்தோஷத்துடன் சொல்கிறாள்
ரயில் கப்பல்ல போவுது
கப்பல் செய்த சிறுமி
மழை நீரில் விட்டு
எல்லோருக்கும் காட்டி
சந்தோஷத்துடன் சொல்கிறாள்
ரயில் கப்பல்ல போவுது
Saturday, July 25, 2009
வந்து போகும்…
ஓடாத மின்விசிறி
அசைந்தபடி
தொங்கும் கயிறு
இப்படி ஒரு கனவு
வந்து போகிறது
சீக்கிரம் கனவை
தூக்கிலிட வேண்டும்
அசைந்தபடி
தொங்கும் கயிறு
இப்படி ஒரு கனவு
வந்து போகிறது
சீக்கிரம் கனவை
தூக்கிலிட வேண்டும்
Thursday, July 23, 2009
இன்னொரு எண்ணம்
எங்கோ என்னை
இழுத்துப் போய்
விட்டுப் போன
எண்ணத்திடம் கேட்டேன்
எப்படித் திரும்புவது
இரு இன்னொரு எண்ணம்
வரும் என்றது
இழுத்துப் போய்
விட்டுப் போன
எண்ணத்திடம் கேட்டேன்
எப்படித் திரும்புவது
இரு இன்னொரு எண்ணம்
வரும் என்றது
Wednesday, July 22, 2009
புறாக்கள்
எங்களுக்கெல்லாம் வராத புறாக்கள்
தாத்தாவுக்கு மட்டும்
ஓடி வரும்
அருகில் வந்து தின்னும்
நாங்கள் கேட்டபோது
சொன்னார் தாத்தா
அடுத்த முறை தானியத்தில்
அன்பைத் தடவி
போட்டுப் பாருங்கள் என்று
தாத்தாவுக்கு மட்டும்
ஓடி வரும்
அருகில் வந்து தின்னும்
நாங்கள் கேட்டபோது
சொன்னார் தாத்தா
அடுத்த முறை தானியத்தில்
அன்பைத் தடவி
போட்டுப் பாருங்கள் என்று
Tuesday, July 21, 2009
Saturday, July 18, 2009
Monday, July 13, 2009
கடைசி வரை
கடைசி வரை
கண்ணாடி போடாமல்
தாத்தா வாழ்ந்ததாக
அப்பா சொல்வார்
எப்படி என்று
கேட்கும்போதெல்லாம்
புன்னகைத்தபடியே
போய்விடுவார்
நெடு நாள் கழித்து
தாத்தாவிடம் பெற்ற பதிலை
ஒரு நாள்
தாத்தா போலவே
அப்பா சொன்னார்
அட போடா நான் அன்பால
எல்லாத்தையும் பாக்கறேன்
அதான் தெளிவாத் தெரியுது
கண்ணாடி போடாமல்
தாத்தா வாழ்ந்ததாக
அப்பா சொல்வார்
எப்படி என்று
கேட்கும்போதெல்லாம்
புன்னகைத்தபடியே
போய்விடுவார்
நெடு நாள் கழித்து
தாத்தாவிடம் பெற்ற பதிலை
ஒரு நாள்
தாத்தா போலவே
அப்பா சொன்னார்
அட போடா நான் அன்பால
எல்லாத்தையும் பாக்கறேன்
அதான் தெளிவாத் தெரியுது
படகும் மீனும்
படகு கேட்டது மீனிடம்
நான் உன்னைப் போல்
நீந்த வேண்டும்
மீன் சொன்னது படகிடம்
நான் உனனைப் போல்
மிதக்க வேண்டும்
நான் உன்னைப் போல்
நீந்த வேண்டும்
மீன் சொன்னது படகிடம்
நான் உனனைப் போல்
மிதக்க வேண்டும்
Saturday, July 11, 2009
சமாதானம்
குடை எடுத்து வராத பெரியவர்
எப்போது நிற்கும் என்கிறார்
பின் நிற்பவர்களைப் பார்த்து
அவரும் ரசிக்க முயற்சித்து
அதுவாய் நிற்கும்
என்று சமாதானம்
சொல்லிக் கொள்கிறார்
எப்போது நிற்கும் என்கிறார்
பின் நிற்பவர்களைப் பார்த்து
அவரும் ரசிக்க முயற்சித்து
அதுவாய் நிற்கும்
என்று சமாதானம்
சொல்லிக் கொள்கிறார்
Friday, July 3, 2009
Sunday, June 28, 2009
Wednesday, June 24, 2009
Thursday, June 18, 2009
ரகசிய பயம்
என்னைப் பற்றிய ரகசியத்தை
என்னிடம் சொன்னால் கூட
வெளியில் கசிந்து விடுமோ என்று
பயமாக இருக்கிறது
என்னிடம் சொன்னால் கூட
வெளியில் கசிந்து விடுமோ என்று
பயமாக இருக்கிறது
Sunday, May 31, 2009
மூன்றாவது நபர்
ஒரே ரயிலில்
பயணித்தபடி
நீயும் நானும்
எத்தனையோ முறை
பேசி இருக்கிறோம்
நம் மெளனத்தின் போதெல்லாம்
ரயில் சத்தம்
மூன்றாவது நபராக
உரையாடலில்
கலந்து கொண்டிருக்கிறது
இப்போதும்
ரயில் வருகிறது
உன் நினைவில்
என் கனவில்
எந்த ரயிலுக்கும்
தெரியவில்லை
நம்மை
நாம் பேசியதை
பயணித்தபடி
நீயும் நானும்
எத்தனையோ முறை
பேசி இருக்கிறோம்
நம் மெளனத்தின் போதெல்லாம்
ரயில் சத்தம்
மூன்றாவது நபராக
உரையாடலில்
கலந்து கொண்டிருக்கிறது
இப்போதும்
ரயில் வருகிறது
உன் நினைவில்
என் கனவில்
எந்த ரயிலுக்கும்
தெரியவில்லை
நம்மை
நாம் பேசியதை
ஒரே மழை
அம்மாவிடம் குழந்தைக் கேட்டாள்
அம்மா இந்த மழையும்
போன வார மழையும் ஒன்னா
சட்டென தடுமாறியத் தாய்
போய் படி என்றாள்
அம்மாவிடம் சொல்லிவிட்டு
ஓடினாள் குழந்தை
ஒரே மழைதாம்மா
அதுக்குத் தோணறப்பல்லாம்
பெய்யுது
அம்மா இந்த மழையும்
போன வார மழையும் ஒன்னா
சட்டென தடுமாறியத் தாய்
போய் படி என்றாள்
அம்மாவிடம் சொல்லிவிட்டு
ஓடினாள் குழந்தை
ஒரே மழைதாம்மா
அதுக்குத் தோணறப்பல்லாம்
பெய்யுது
Monday, May 18, 2009
Monday, May 4, 2009
Wednesday, April 29, 2009
பார்வைகள்
நீ என்னைப் பார்த்து பேசுவது
காதலைப் பார்த்துப் பேசுவது
போலிருக்கிறது
நான் உன்னைப் பார்த்துப் பேசுவது
கவிதையைப் பார்த்துப் பேசுவது
போலிருக்கிறது
காதலைப் பார்த்துப் பேசுவது
போலிருக்கிறது
நான் உன்னைப் பார்த்துப் பேசுவது
கவிதையைப் பார்த்துப் பேசுவது
போலிருக்கிறது
Wednesday, April 22, 2009
உதடுகள்
நாம்
முத்தம் கொடுக்கும்
நெருக்கத்தில்
பேசிக்கொண்டிருக்கிறோம்
புத்திசாலி உதடுகள்
புரிந்து கொண்டால் சரி
முத்தம் கொடுக்கும்
நெருக்கத்தில்
பேசிக்கொண்டிருக்கிறோம்
புத்திசாலி உதடுகள்
புரிந்து கொண்டால் சரி
Monday, April 20, 2009
Friday, April 10, 2009
குறுங்கவிதை
ஒரு குறுங்கவிதையை
சொல்லிவிட்டுப் போகின்றன
உன் கண்கள்
அதை திரும்ப
எழுதிப் பார்க்கையில்
முடிந்தபாடில்லை
சொல்லிவிட்டுப் போகின்றன
உன் கண்கள்
அதை திரும்ப
எழுதிப் பார்க்கையில்
முடிந்தபாடில்லை
Friday, April 3, 2009
மீட்டெடுத்தல்
நான் எழுத
மறந்து போன கவிதையை
நீ திரும்ப சொன்னாய்
அழகாக
பின்னொரு நாளில்
மீண்டும் கேட்டபோது
அது உனக்கும்
மறந்து போயிருந்தது
ஆயுள் கெட்டியான
கவிதை எனில்
அது மறதியை
ஜெயித்து வாழும் என்றேன்
நீ சிரித்தபடியே
சொல்லிப் பார்த்தாய்
அதே கவிதையை
உனது வார்த்தைகளில்
என் மறதிக்குள்
புதைந்து போன
கவிதையின்
முதல் சொல்
ஒரு செடிபோல்
எட்டிப் பார்த்தது
பின் முழுதும் வந்தது
நம்மை மீட்டெடுத்தது கவிதையா
நாம் மீட்டெடுத்தது கவிதையா
என்று இதன் பிறகு
பேசத் தொடங்கினோம்
மழை அள்ளி விளையாடும்
குழந்தைகளைப்போல
மறந்து போன கவிதையை
நீ திரும்ப சொன்னாய்
அழகாக
பின்னொரு நாளில்
மீண்டும் கேட்டபோது
அது உனக்கும்
மறந்து போயிருந்தது
ஆயுள் கெட்டியான
கவிதை எனில்
அது மறதியை
ஜெயித்து வாழும் என்றேன்
நீ சிரித்தபடியே
சொல்லிப் பார்த்தாய்
அதே கவிதையை
உனது வார்த்தைகளில்
என் மறதிக்குள்
புதைந்து போன
கவிதையின்
முதல் சொல்
ஒரு செடிபோல்
எட்டிப் பார்த்தது
பின் முழுதும் வந்தது
நம்மை மீட்டெடுத்தது கவிதையா
நாம் மீட்டெடுத்தது கவிதையா
என்று இதன் பிறகு
பேசத் தொடங்கினோம்
மழை அள்ளி விளையாடும்
குழந்தைகளைப்போல
Saturday, March 28, 2009
முகங்கள்
நீ வருவதாக
சொன்ன ரயிலில்
வந்து சேரவில்லை
எல்லோரும்
இறங்கிப் போகிறார்கள்
உன் முகத்தை
அணிந்தபடி
--------------------------------
சொன்ன ரயிலில்
வந்து சேரவில்லை
எல்லோரும்
இறங்கிப் போகிறார்கள்
உன் முகத்தை
அணிந்தபடி
--------------------------------
Monday, March 9, 2009
Sunday, March 8, 2009
உனக்கு
என் மீது
உனக்கு நம்பிக்கை
வந்த பிறகு
காதலை சொல்லலாம்
என்றிருந்தேன்
காதலே ஒரு
நம்பிக்கை
என்பதை உணராமல்
உனக்கு நம்பிக்கை
வந்த பிறகு
காதலை சொல்லலாம்
என்றிருந்தேன்
காதலே ஒரு
நம்பிக்கை
என்பதை உணராமல்
Saturday, February 21, 2009
புன்னகையின் கோடுகள்
உன் வார்த்தைகளுக்கு
அடிக்கோடிட்டது போல்
கூடவே புன்னகையும்
நீ பேசியது
மறந்து போனாலும்
உன் புன்னகையை வைத்து
அதை என்னால்
உணர முடியும்
அடிக்கோடிட்டது போல்
கூடவே புன்னகையும்
நீ பேசியது
மறந்து போனாலும்
உன் புன்னகையை வைத்து
அதை என்னால்
உணர முடியும்
கை அள்ளும் நீர்
நீ கை அள்ளும்
நீரைப் போலவே
எளிமையானதுதான்
என் அன்பும்
அருந்தலாம்
இல்லை அப்படியே
விட்டு விடலாம்
நீரைப் போலவே
எளிமையானதுதான்
என் அன்பும்
அருந்தலாம்
இல்லை அப்படியே
விட்டு விடலாம்
Friday, February 20, 2009
வரும் சந்திப்புகளில்
இந்த சந்திப்பில்
நான் மறைத்த
பொய்களுக்கு
நீயும்
நீ மறைத்த
பொய்களுக்கு
நானும்
மன்னிப்புகளை
வழங்கிக் கொள்வோம்
வரும் சந்திப்புகளில்
நாம் பேசும்
உண்மைகள்
மற்ற பொய்களிலிருந்து
நம்மை
விடுவிக்கட்டும்
நான் மறைத்த
பொய்களுக்கு
நீயும்
நீ மறைத்த
பொய்களுக்கு
நானும்
மன்னிப்புகளை
வழங்கிக் கொள்வோம்
வரும் சந்திப்புகளில்
நாம் பேசும்
உண்மைகள்
மற்ற பொய்களிலிருந்து
நம்மை
விடுவிக்கட்டும்
Tuesday, February 17, 2009
நன்றி
உனக்கு நான்
சொல்ல நினைத்து
சொல்லாமல் போன
நன்றிகள் எல்லாம் சேர்ந்து
மாறி இருந்தன
பூந்தோட்டமாய்
இதற்கு எப்படி
நன்றி சொல்ல
சொல்ல நினைத்து
சொல்லாமல் போன
நன்றிகள் எல்லாம் சேர்ந்து
மாறி இருந்தன
பூந்தோட்டமாய்
இதற்கு எப்படி
நன்றி சொல்ல
Sunday, February 15, 2009
பட்டம்
சட்டென மறைந்து போனது
குழந்தை விட்ட பட்டம்
கடற்கரை நெரிசலில்
எப்படித் தேட
குழந்தையை சமாளிக்க
அப்பா சொன்னார்
பட்டம் வானத்துக்கு
அந்த பக்கம் போயிருக்கும்
கண் துடைத்தபடி
குழந்தை கேட்டது
பட்டம் என்னத்
தேடுமாப்பா
குழந்தை விட்ட பட்டம்
கடற்கரை நெரிசலில்
எப்படித் தேட
குழந்தையை சமாளிக்க
அப்பா சொன்னார்
பட்டம் வானத்துக்கு
அந்த பக்கம் போயிருக்கும்
கண் துடைத்தபடி
குழந்தை கேட்டது
பட்டம் என்னத்
தேடுமாப்பா
மணல்
முழு கடலையும்
தன் கண்களுக்குள்
சுருட்டிக்கொண்டு
ஓடுகிறாள் அவள்
நீரற்று தவிக்கிறது மணல்
என்னைப் போன்று
தன் கண்களுக்குள்
சுருட்டிக்கொண்டு
ஓடுகிறாள் அவள்
நீரற்று தவிக்கிறது மணல்
என்னைப் போன்று
உதிரும் நான்
பூக்காரியிடம்
பேரம் பேசிக்கொண்டிருந்தேன்
அவள் சிரித்தபடியே
என்னை உதிர்த்துக் கொண்டிருந்தாள்
பேரம் பேசிக்கொண்டிருந்தேன்
அவள் சிரித்தபடியே
என்னை உதிர்த்துக் கொண்டிருந்தாள்
Thursday, February 12, 2009
கடலில் புதைந்த கவிதை
நீங்கள்
மூழ்கி
நீர் குடைந்து
அடைந்தாலொழிய
மீட்டெடுக்க முடியாது
கடலில் புதைந்த
கவிதையை
மூழ்கி
நீர் குடைந்து
அடைந்தாலொழிய
மீட்டெடுக்க முடியாது
கடலில் புதைந்த
கவிதையை
Monday, February 9, 2009
உன்னைக் கூப்பிடுகிறேன்
மிகச்சுருக்கமாய்
என்ன பேசலாம் என்று
முடிவு செய்த பிறகு
உனனைக் கூப்பிடுகிறேன்
ஒலிக்கிறது
உன் கைபேசி
அந்த ஒலியோடு
சேர்கின்றன என்
வார்த்தைகளும்
நீ எடுக்கவில்லை
துண்டிக்கப்படுகிறது
என்றாலும்
முடிந்திருக்கிறது
என் உரையாடல்
என்ன பேசலாம் என்று
முடிவு செய்த பிறகு
உனனைக் கூப்பிடுகிறேன்
ஒலிக்கிறது
உன் கைபேசி
அந்த ஒலியோடு
சேர்கின்றன என்
வார்த்தைகளும்
நீ எடுக்கவில்லை
துண்டிக்கப்படுகிறது
என்றாலும்
முடிந்திருக்கிறது
என் உரையாடல்
விடுமுறையும் ஊரும்
விடுமுறைக்கு ஊர் வந்து
விடுமுறை ரத்து செய்யப்பட்டு
அவசரமாய் கிளம்பியபோது
அப்பா சொன்னார்
இதுக்கு நீ வராமயே
இருந்திருக்கலாம்
பதில் சொல்லாமல் திரும்பிய
என்னால் ஏமார்ந்திருக்கும்
ஊரும்
விடுமுறை ரத்து செய்யப்பட்டு
அவசரமாய் கிளம்பியபோது
அப்பா சொன்னார்
இதுக்கு நீ வராமயே
இருந்திருக்கலாம்
பதில் சொல்லாமல் திரும்பிய
என்னால் ஏமார்ந்திருக்கும்
ஊரும்
Thursday, February 5, 2009
Wednesday, February 4, 2009
உனக்கு...
நான் சென்று கொண்டிருப்பது
இருள் நிறைந்த பாதை
என்னிடமிருக்கிறது
உன் ஒளி நிறைந்த புன்னகை
(சுகிக்கு)
இருள் நிறைந்த பாதை
என்னிடமிருக்கிறது
உன் ஒளி நிறைந்த புன்னகை
(சுகிக்கு)
Monday, February 2, 2009
முடிவு செய்த பிறகு
போகலாம் என
முடிவு செய்த பிறகு
எல்லாமே உனக்கு
அவசரமாயிற்று
காத்திருக்கலாம் என
முடிவு செயத பிறகு
எல்லாமே எனக்கு
அவசியமாயிற்று
முடிவு செய்த பிறகு
எல்லாமே உனக்கு
அவசரமாயிற்று
காத்திருக்கலாம் என
முடிவு செயத பிறகு
எல்லாமே எனக்கு
அவசியமாயிற்று
Thursday, January 29, 2009
புகார் புத்தகம்
புகார் புத்தகமாகி இருக்கிறது
என் நாட்குறிப்பேடு
தாள்கள் தீர்வதற்குள்
எல்லோரும்
விசாரித்து முடிக்க வேண்டும்
என்னை
என் நாட்குறிப்பேடு
தாள்கள் தீர்வதற்குள்
எல்லோரும்
விசாரித்து முடிக்க வேண்டும்
என்னை