Tuesday, December 1, 2009

நம்மவன்

துடைக்க மனமின்றி
உன் கண்ணீரை
இந்த பாட்டிலில்
நிரப்பிக்கொள் என்று
தருபவனிடமிருந்து வாங்கி
அதை உடைத்து
அவன் முகத்தைக் கீறி
சிந்தும் ரத்தத்தை
உன் கைகளில்
ஏந்திக்கொள்
எனச் சொல்லிவிட்டுப் போகிறவன்
சொரணை இழக்காத நம்மவன்

No comments: