Saturday, July 11, 2009

சமாதானம்

குடை எடுத்து வராத பெரியவர்
எப்போது நிற்கும் என்கிறார்

பின் நிற்பவர்களைப் பார்த்து
அவரும் ரசிக்க முயற்சித்து
அதுவாய் நிற்கும்
என்று சமாதானம்
சொல்லிக் கொள்கிறார்

No comments: