Saturday, November 14, 2009

சருகு

இந்த இடத்தில்
உதிர்ந்து கிடக்கும் சருகு
உயிர்த்தெழுந்து
மரமாகி
இடத்தை அடைக்கிறது
விழவிடாத
சருகுகளோடு காற்றில்
உரையாடுகிறது
மகிழ்கிறது
மீண்டும் சருகாகி
நிகழ்ந்ததை
நினைத்துப் பார்க்கிறது
காற்றில் படபடக்கிறது
கால்பட்டு
இறந்து போகிறது

No comments: