Monday, April 28, 2014

தனித்தனியே

சந்திக்க வேண்டிய 
நாம் 
தனித்தனியே 
காத்திருக்கிறோம் 
யாருக்கு 
எதற்கு 
ஏன் 
என்று தெரியாமல்

Wednesday, April 23, 2014

தலையணை மெளனம்

உன்
தலையணை மெளனம் 
பிடித்திருக்கிறது

அவன்

ரயில் பெட்டியில் 
எல்லோரும் 
குழந்தைகளாக இருந்தார்கள் 
அவன் குழந்தையாக 
முயற்சி செய்து கொண்டிருந்தான்

சித்திரம்

நான் உன் கண்ணுக்குள் 
இருக்கும் சித்திரம் 
கண்ணீரில் 
வழிய விடாதே 
பிரியும் போது 
அவள் சொன்னாள்