பூங்காவில் மொத்தம்
ஏழு குழந்தைகள் விளையாடினர்
என் பால்யத்தையும்
சேர்த்து எட்டு
Thursday, July 30, 2009
Sunday, July 26, 2009
சிறுமியின் ஊர்தி
ரயில் வரைந்த காகிதத்தில்
கப்பல் செய்த சிறுமி
மழை நீரில் விட்டு
எல்லோருக்கும் காட்டி
சந்தோஷத்துடன் சொல்கிறாள்
ரயில் கப்பல்ல போவுது
கப்பல் செய்த சிறுமி
மழை நீரில் விட்டு
எல்லோருக்கும் காட்டி
சந்தோஷத்துடன் சொல்கிறாள்
ரயில் கப்பல்ல போவுது
Saturday, July 25, 2009
வந்து போகும்…
ஓடாத மின்விசிறி
அசைந்தபடி
தொங்கும் கயிறு
இப்படி ஒரு கனவு
வந்து போகிறது
சீக்கிரம் கனவை
தூக்கிலிட வேண்டும்
அசைந்தபடி
தொங்கும் கயிறு
இப்படி ஒரு கனவு
வந்து போகிறது
சீக்கிரம் கனவை
தூக்கிலிட வேண்டும்
Thursday, July 23, 2009
இன்னொரு எண்ணம்
எங்கோ என்னை
இழுத்துப் போய்
விட்டுப் போன
எண்ணத்திடம் கேட்டேன்
எப்படித் திரும்புவது
இரு இன்னொரு எண்ணம்
வரும் என்றது
இழுத்துப் போய்
விட்டுப் போன
எண்ணத்திடம் கேட்டேன்
எப்படித் திரும்புவது
இரு இன்னொரு எண்ணம்
வரும் என்றது
Wednesday, July 22, 2009
புறாக்கள்
எங்களுக்கெல்லாம் வராத புறாக்கள்
தாத்தாவுக்கு மட்டும்
ஓடி வரும்
அருகில் வந்து தின்னும்
நாங்கள் கேட்டபோது
சொன்னார் தாத்தா
அடுத்த முறை தானியத்தில்
அன்பைத் தடவி
போட்டுப் பாருங்கள் என்று
தாத்தாவுக்கு மட்டும்
ஓடி வரும்
அருகில் வந்து தின்னும்
நாங்கள் கேட்டபோது
சொன்னார் தாத்தா
அடுத்த முறை தானியத்தில்
அன்பைத் தடவி
போட்டுப் பாருங்கள் என்று
Tuesday, July 21, 2009
Saturday, July 18, 2009
Monday, July 13, 2009
கடைசி வரை
கடைசி வரை
கண்ணாடி போடாமல்
தாத்தா வாழ்ந்ததாக
அப்பா சொல்வார்
எப்படி என்று
கேட்கும்போதெல்லாம்
புன்னகைத்தபடியே
போய்விடுவார்
நெடு நாள் கழித்து
தாத்தாவிடம் பெற்ற பதிலை
ஒரு நாள்
தாத்தா போலவே
அப்பா சொன்னார்
அட போடா நான் அன்பால
எல்லாத்தையும் பாக்கறேன்
அதான் தெளிவாத் தெரியுது
கண்ணாடி போடாமல்
தாத்தா வாழ்ந்ததாக
அப்பா சொல்வார்
எப்படி என்று
கேட்கும்போதெல்லாம்
புன்னகைத்தபடியே
போய்விடுவார்
நெடு நாள் கழித்து
தாத்தாவிடம் பெற்ற பதிலை
ஒரு நாள்
தாத்தா போலவே
அப்பா சொன்னார்
அட போடா நான் அன்பால
எல்லாத்தையும் பாக்கறேன்
அதான் தெளிவாத் தெரியுது
படகும் மீனும்
படகு கேட்டது மீனிடம்
நான் உன்னைப் போல்
நீந்த வேண்டும்
மீன் சொன்னது படகிடம்
நான் உனனைப் போல்
மிதக்க வேண்டும்
நான் உன்னைப் போல்
நீந்த வேண்டும்
மீன் சொன்னது படகிடம்
நான் உனனைப் போல்
மிதக்க வேண்டும்
Saturday, July 11, 2009
சமாதானம்
குடை எடுத்து வராத பெரியவர்
எப்போது நிற்கும் என்கிறார்
பின் நிற்பவர்களைப் பார்த்து
அவரும் ரசிக்க முயற்சித்து
அதுவாய் நிற்கும்
என்று சமாதானம்
சொல்லிக் கொள்கிறார்
எப்போது நிற்கும் என்கிறார்
பின் நிற்பவர்களைப் பார்த்து
அவரும் ரசிக்க முயற்சித்து
அதுவாய் நிற்கும்
என்று சமாதானம்
சொல்லிக் கொள்கிறார்