வீடெங்கும்
விளையாடுகின்றன நிறங்கள்
குழந்தை வரைந்த வானவில்
Thursday, October 28, 2010
Monday, October 25, 2010
புல்லாங்குழல் கண்கள்
1-
கிடார் இசைக்கும் மழை
கேட்கலாம்
பார்க்கலாம்
புல்லாங்குழல் கண்களால்
2-
பயணம்
ரயில்
புத்தகமானது
3-
இளைப்பாறும் நிழலை
வெட்டுகிறான்
வெயில் தீண்ட
கிடார் இசைக்கும் மழை
கேட்கலாம்
பார்க்கலாம்
புல்லாங்குழல் கண்களால்
2-
பயணம்
ரயில்
புத்தகமானது
3-
இளைப்பாறும் நிழலை
வெட்டுகிறான்
வெயில் தீண்ட
Tuesday, October 19, 2010
உனது பதிவுகள்
1-
நீ பிறந்த நாளின்று
நான் ரத்தம் கொடுத்தபடியே
உனக்கான கவிதையை
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
2-
நம் அருகில் அமர்ந்திருந்த
பார்வையற்ற தோழர்
சொல்லிச் செல்கிறார்
என்னால் உங்கள் காதலைப்
பார்க்க முடிகிறது
3-
இனிப்பை விட்டுவிட்டு
உன் பெயரை
இழுத்துப் போகின்றன
எறும்புகள்
நீ பிறந்த நாளின்று
நான் ரத்தம் கொடுத்தபடியே
உனக்கான கவிதையை
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
2-
நம் அருகில் அமர்ந்திருந்த
பார்வையற்ற தோழர்
சொல்லிச் செல்கிறார்
என்னால் உங்கள் காதலைப்
பார்க்க முடிகிறது
3-
இனிப்பை விட்டுவிட்டு
உன் பெயரை
இழுத்துப் போகின்றன
எறும்புகள்
Sunday, October 17, 2010
உனக்கானவை
1-
உன் சிரிப்பின்
கைப்பிடித்துப் போகின்றன
நினைவுகள்
இங்கேயே நிற்கிறேன்
அது வந்து
சொல்லப் போகும்
கவிதைக்காக
2-
அந்நியமாக
நீ கடந்து போகிறாய்
வழி நட்பாக
நான் மிதந்து போகிறேன்
உன் சிரிப்பின்
கைப்பிடித்துப் போகின்றன
நினைவுகள்
இங்கேயே நிற்கிறேன்
அது வந்து
சொல்லப் போகும்
கவிதைக்காக
2-
அந்நியமாக
நீ கடந்து போகிறாய்
வழி நட்பாக
நான் மிதந்து போகிறேன்
Saturday, October 16, 2010
உன்னை நோக்கி...
இனிப்புகளும் தித்திப்புகளும்
என்னை
திசைத் திருப்பலாம்
உன் கசப்பின்மையே
உன்னை நோக்கி
என்னை வரச் செய்யும்
என்னை
திசைத் திருப்பலாம்
உன் கசப்பின்மையே
உன்னை நோக்கி
என்னை வரச் செய்யும்
Thursday, October 14, 2010
Monday, October 11, 2010
நிகழ்தல்
நான் பேசுவது
பிடிக்கும்போது
புன்னகைக்கிறாய்
இல்லாதபோது
மெளனமாகிறாய்
புன்னகைக்கும் மெளனத்திற்கும்
இடையில் நிகழ்கிறது
உன் உரையாடல்
பிடிக்கும்போது
புன்னகைக்கிறாய்
இல்லாதபோது
மெளனமாகிறாய்
புன்னகைக்கும் மெளனத்திற்கும்
இடையில் நிகழ்கிறது
உன் உரையாடல்
Monday, October 4, 2010
ஒரு மதியத்தில்
ஒரு ஞாயிறு மதியத்தில்
நீயும் நானும்
பேசிக்கொண்டிருந்தோம்
பின் பேசியதைக்
கேட்டுக் கொண்டிருந்தோம்
நீயும் நானும்
பேசிக்கொண்டிருந்தோம்
பின் பேசியதைக்
கேட்டுக் கொண்டிருந்தோம்