Sunday, May 31, 2009

மூன்றாவது நபர்

ஒரே ரயிலில்
பயணித்தபடி
நீயும் நானும்
எத்தனையோ முறை
பேசி இருக்கிறோம்

நம் மெளனத்தின் போதெல்லாம்
ரயில் சத்தம்
மூன்றாவது நபராக
உரையாடலில்
கலந்து கொண்டிருக்கிறது

இப்போதும்
ரயில் வருகிறது
உன் நினைவில்
என் கனவில்

எந்த ரயிலுக்கும்
தெரியவில்லை
நம்மை
நாம் பேசியதை

ஒரே மழை

அம்மாவிடம் குழந்தைக் கேட்டாள்
அம்மா இந்த மழையும்
போன வார மழையும் ஒன்னா
சட்டென தடுமாறியத் தாய்
போய் படி என்றாள்
அம்மாவிடம் சொல்லிவிட்டு
ஓடினாள் குழந்தை
ஒரே மழைதாம்மா
அதுக்குத் தோணறப்பல்லாம்
பெய்யுது

Monday, May 18, 2009

உன் புன்னகையை
வரைந்து பார்த்தேன்
வானவில் கிடைத்தது

Monday, May 4, 2009

சொற்களின் தழும்புகள்

உன் மெளனம்
எறிந்த கற்களில்
சொற்களின் தழும்புகள்

காதல் வனம்

உன் பிரியத்தை
எழுதலாம் என்று
தாளில்
குவித்து வைத்தேன்
பூத்துக் குலுங்கியது
காதல் வனம்