Friday, September 23, 2011

வலி

1-
பயண ஜன்னல்
நினைவுகளைப் போல
கடந்து போகும் மரங்கள்
2-
துண்டிக்கப்பட்ட உணர்வில்
கசிகிறது வலி
ரத்தம் போல

Thursday, September 15, 2011

தூரம்

வந்து சேர்ந்த பின்னும்
நமக்கிடையில்
உள்ள தூரத்தைக்
கடந்து கொண்டிருந்தோம்

உனது பெயர்

உன் பெயரை
ஊதிப் பார்க்கிறேன்
பூக்களாக

உதிர்ந்த பூக்களை
கோர்த்துப் பார்க்கிறேன்
உன் பெயராக

Tuesday, September 6, 2011

தாஜ்மஹாலும் காதல் மனைவியும்

தாஜ்மஹால் அருகில் நின்று
புகைப்படம்
எடுத்துக் கொள்ளவேண்டும் என்று
காதல் மனைவி அடிக்கடி
கோரிக்கை வைக்கிறாள்
கண்ணைக் கசக்குகிறாள்
போட்டோ ஸ்டுடியோவில்
தாஜ்மஹால் இருக்கும்
போய் எடுத்துக் கொள்ளலாம் என்றால்
கேட்க மாட்டேன் என்கிறாள்
ஆக்ராதான் போக வேண்டும்
என்று அடம் பிடிக்கிறாள்

கடந்து போனவர்கள்

நடந்த போது
எத்தனையோ பேர்
கடந்து போனார்கள்

அவர்களுக்கு
நானும் ஒருவனாகத்தான்
அப்படிப் போயிருப்பேன்

வார்த்தைகள்

வந்து சேராமல்
அங்குமிங்குமாய்
பாதரசம் போல் உருள்கின்றன
வார்த்தைகள்