ஒளிந்து கொண்டிருக்கும்
கவிதைக்குள்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கும்
கவிதை
கண்டெடுப்பது
எக்காலம்
Saturday, December 26, 2009
Friday, December 25, 2009
Saturday, December 19, 2009
Friday, December 18, 2009
இன்றும் நானும்
இன்று
நான்
எதுவும்
எழுத இல்லை
இன்றும்
என்னை
எழுத
வைக்கவில்லை
இன்றும் நானும்
மொழியற்று
எழுத்தற்று
எதுவுமற்று
நான்
எதுவும்
எழுத இல்லை
இன்றும்
என்னை
எழுத
வைக்கவில்லை
இன்றும் நானும்
மொழியற்று
எழுத்தற்று
எதுவுமற்று
Tuesday, December 15, 2009
Sunday, December 13, 2009
Friday, December 11, 2009
Wednesday, December 9, 2009
கேள்விகள்
என்னைக் கேள்விகள்
கேட்டுக் கொண்டே
இருந்தீர்கள்
கேள்விகளுக்குள்
நுழைந்து போய்
பார்த்த போது
உள்ளீடற்ற உங்கள்
உருவம் தெரிந்தது
ஒரு புன்முறுவலோடு
வெளியே வந்து
பார்க்க
நீங்கள் இருந்த இடத்தில்
எறும்பு அளவுக்கு ஒரு
கேள்வி இருந்தது
துடித்தபடி
கேட்டுக் கொண்டே
இருந்தீர்கள்
கேள்விகளுக்குள்
நுழைந்து போய்
பார்த்த போது
உள்ளீடற்ற உங்கள்
உருவம் தெரிந்தது
ஒரு புன்முறுவலோடு
வெளியே வந்து
பார்க்க
நீங்கள் இருந்த இடத்தில்
எறும்பு அளவுக்கு ஒரு
கேள்வி இருந்தது
துடித்தபடி
Tuesday, December 1, 2009
நம்மவன்
துடைக்க மனமின்றி
உன் கண்ணீரை
இந்த பாட்டிலில்
நிரப்பிக்கொள் என்று
தருபவனிடமிருந்து வாங்கி
அதை உடைத்து
அவன் முகத்தைக் கீறி
சிந்தும் ரத்தத்தை
உன் கைகளில்
ஏந்திக்கொள்
எனச் சொல்லிவிட்டுப் போகிறவன்
சொரணை இழக்காத நம்மவன்
உன் கண்ணீரை
இந்த பாட்டிலில்
நிரப்பிக்கொள் என்று
தருபவனிடமிருந்து வாங்கி
அதை உடைத்து
அவன் முகத்தைக் கீறி
சிந்தும் ரத்தத்தை
உன் கைகளில்
ஏந்திக்கொள்
எனச் சொல்லிவிட்டுப் போகிறவன்
சொரணை இழக்காத நம்மவன்
புத்திசாலி
அதை
புத்திசாலி மீன் என்று
ஒத்துக் கொண்டேன்
வாயைத் திறந்து
தின்று கொண்டிருந்த
தூண்டிலைக் காட்டியபோது
புத்திசாலி மீன் என்று
ஒத்துக் கொண்டேன்
வாயைத் திறந்து
தின்று கொண்டிருந்த
தூண்டிலைக் காட்டியபோது