Wednesday, August 26, 2009

இந்த கவிதை

இந்த கவிதையை
நான் எழுதாவிட்டாலும்
அது இருக்கும்
உங்கள் இசையில் ஒரு பாட்டாக
அவர் வண்ணத்தில் ஒரு ஓவியமாக
இவர் நடனத்தில் ஒரு அசைவாக
மற்றும் பலவாக

என் மெளனத்தில்
இன்னும் நிசப்தமாக

1 comment:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

கவிதை எங்குமிருக்கும். எப்போதுமிருக்கும் :)

-ப்ரியமுடன்
சேரல்