Monday, July 13, 2009

கடைசி வரை

கடைசி வரை
கண்ணாடி போடாமல்
தாத்தா வாழ்ந்ததாக
அப்பா சொல்வார்

எப்படி என்று
கேட்கும்போதெல்லாம்
புன்னகைத்தபடியே
போய்விடுவார்

நெடு நாள் கழித்து
தாத்தாவிடம் பெற்ற பதிலை
ஒரு நாள்
தாத்தா போலவே
அப்பா சொன்னார்

அட போடா நான் அன்பால
எல்லாத்தையும் பாக்கறேன்
அதான் தெளிவாத் தெரியுது

No comments: