Wednesday, January 6, 2010

அன்பின் குறிப்புகள்

1-
உன்னிடம்
இருக்கும் என்னை
விடுவிப்பாயா

2-

தெரிந்து கொண்டேன்
என் அன்பில்
உன் அன்பிருப்பதை

3-

உன் கண்களில்
அன்பின் வன்முறை
சொல்
இது எதுவரை

4-

என்ன பரிசு
உனக்குத் தரலாம்
கேள்விக்கு கிடைக்கவில்லை
பதில்கள்
பரிசுக்குத் தேவையில்லை
கேள்விகள்

5-

நீ அருகில் இல்லை
அனாதையாய் விழுகிறது
கண்ணீர்

6-

உன் முகம் துடைத்த
கைக்குட்டையில்
புன்னகைகள்
தேடாதே
என்னிடமே இருக்கட்டும்

3 comments:

பூங்குன்றன்.வே said...

//நீ அருகில் இல்லை
அனாதையாய் விழுகிறது
கண்ணீர்//

அசத்தல்.அற்புதம்.நல்லா இருக்கு கவிதை.

கல்யாணி சுரேஷ் said...

என்ன சொல்றது ராஜா? உங்கள் அன்பினை கொள்ளை கொண்டுள்ள அவங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க.

கல்யாணி சுரேஷ் said...

//உன் கண்களில்
அன்பின் வன்முறை
சொல்
இது எதுவரை//

அன்பின் வன்முறை - I like it very much.

//நீ அருகில் இல்லை
அனாதையாய் விழுகிறது
கண்ணீர்//

I love this lines.

Thank you so much Raajaa.