Sunday, January 16, 2011

குழந்தைச் சித்திரங்கள்

ஒற்றைக் கொலுசு
தொலைத்துப் போனவளை
இசையாக வரைகிறது

----

இங்கிருக்கும் நீ
அங்கிருந்து
எப்படி வருவாய்

------

காலியான வீடு
வெள்ளையடிப்பவன் கண்களில்
குழந்தைச் சித்திரங்கள்

----

அரங்கத்தின் அமைதியை
வலிமையாக்குகிறது
குழந்தையின் சத்தம்

------

லாஸ் ஏஞ்ஜெல்ஸ்சில்
எங்களூர் கிராமம்
டெஸ்க்டாப்பில்

No comments: