Saturday, January 29, 2011

தங்கையின் நினைவுக்கு

தங்கையின் கண்ணோரம்
கசிந்த துளியை
அண்ணன்தான்
கவனித்துப் பார்த்தார்

பின்னாளில் சொன்னார்

அந்த கண்ணீர்
தங்கையின்
வலியை
வருத்தத்தை
வாழ்க்கையை
குழந்தைகளை
எல்லாம் சொன்னதாக

தங்கைக்கு நிகழப்போகும்
மரணம் பற்றி
சொன்னதை
கடைசி வரை
சொல்லவே இல்லை

(எங்களை விட்டு மறைந்துபோன
தங்கை அமுதாவின் நினைவிற்கு)

3 comments:

மதுரை சரவணன் said...

தங்கையின் நினைவு கவிதையில் அருமையாக காட்டியுள்ளீர்.வலியும் வேதனையும் புரிகிறது.. என் ஆறுதல்கள்

அன்புடன் அருணா said...

என் அஞ்சலிகள்.

MANO நாஞ்சில் மனோ said...

ஓ மை காட்......
எனது அஞ்சலிகள்......