Wednesday, January 26, 2011

மூன்று கவிதைகள்

அம்மா கூப்பிட
ஓடியது குழந்தை
சொர்க்கத்தை நிரப்பிவிட்டு

----------

வியூகம்
அமைத்த பின்பே வேட்டை
சில நேரம்
சிக்கிவிடுகின்றன
வியூகத்திலேயே

-----------

உனக்கென்ன
இறைத்துவிட்டுப் போகிறாய்
அடுக்கிவைப்பதற்குள்
போய்விடுகிறது
என் பொழுது

-----------

3 comments:

arasan said...

மூன்றும் முத்துக்கள்

ராஜா சந்திரசேகர் said...

நன்றி அரசன்.

புபேஷ் said...

உனக்கென்ன
இறைத்துவிட்டுப் போகிறாய்
அடுக்கிவைப்பதற்குள்
போய்விடுகிறது
என் பொழுது
..ahahha...good one