Monday, January 10, 2011

ஏழு

குளிரில்
படபடக்கும் பட்டாம் பூச்சி
எதைப் போர்த்திக்கொள்ளும்

-----

எப்போது தேடினாலும்
எழுதாதப் பேனாவே
கையில் கிடைக்கிறது

------

அம்மா காட்டிய உலகத்தைதான்
படித்துக்கொண்டிருக்கிறோம்
இன்னும்

-----

சித்தப்பாவின் கடிகாரத்தைக்
கட்டிக்கொண்ட குழந்தை
மணி பார்த்துச் சொல்கிறது
உலகத்திற்கு

---

சுவர்கள் பேசுவதைக்
கேட்கும்போதெல்லாம் கூடுகிறது
அமைதியின் கனம்

---

நகரத்தை விட்டு வெளியேறியவன்
சுற்றிக்கொண்டிருந்தான்
நகரத்திலேயே

----

நீ புள்ளியான தொலைவை
கடப்பது ஒன்றும் கடினமில்லை
அதுவும்
புள்ளிப்போலத்தான்

2 comments:

சமுத்ரா said...

nice!

கல்யாணி சுரேஷ் said...

//எப்போது தேடினாலும்
எழுதாதப் பேனாவே
கையில் கிடைக்கிறது//

//நீ புள்ளியான தொலைவை
கடப்பது ஒன்றும் கடினமில்லை
அதுவும்
புள்ளிப்போலத்தான்//

ரசித்தேன்.


//நகரத்தை விட்டு வெளியேறியவன்
சுற்றிக்கொண்டிருந்தான்
நகரத்திலேயே//

அருமை.