Friday, February 26, 2010

யுத்த தர்மம்

போரில்
நீங்கள் எத்தனை பேரை
கொன்றிருப்பீர்கள்

கணக்கெதுவும் இல்லை
சுமார் ஐம்பது…அறுபது…

நல்லது
போரும் மரணங்களும்
என்ற தலைப்பில்
உங்களின் நிகழ்வுகளை
ஒவ்வொரு வாரமும்
எழுத முடியுமா

மன்னிக்கவும்
ஒருமுறை கொன்றவர்களை
மீண்டும் கொல்வதென்பது
என் யுத்த தர்மத்திற்கு
எதிரானது

7 comments:

அன்புடன் நான் said...

நச்!

வாழ்த்துக்கள்.

அகல்விளக்கு said...

அர்த்தம் பொதிந்த கவிதை...

அருமை....

தேவன் மாயம் said...

ஒருமுறை கொன்றவர்களை மறுபடி கொல்லமுடியாது”

கொடுமைதான் !!!

பிரேமா மகள் said...

உங்களை காதல் கவிஞர் என்று நினைத்திருந்தேன். சமூக அக்கறையுள்ள கவிதையை எழுதி... எங்கேயோ போய்விட்டீர்கள்.

ராஜா சந்திரசேகர் said...

நண்பர்களுக்கு நன்றி.

கல்யாணி சுரேஷ் said...

அருமையான கவிதை ராஜா.

தமிழ் said...

அருமை