Tuesday, February 2, 2010

பயணத்தின் நடுவே...

1-

எந்த இசைக்குள் அடங்கும்
இந்த மழையின்
சத்தம்

2-

நண்பன் சொன்ன கவிதை
பாடல் போல் ஒலிக்கிறது
பயணத்தின் நடுவே

3-

அழுகை நிறுத்திய
குழந்தையின் கன்னத்தில்
பிஞ்சுத்துளி சிரிக்கிறது

4-

கண் விழித்த சொல்
உறங்கிக் கொண்டிருக்கலாம்
ஏதோ ஒரு
கவிதையில்

2 comments:

மயூ மனோ (Mayoo Mano) said...

//எந்த இசைக்குள் அடங்கும்
இந்த மழையின்
சத்தம்//

அருமை..

கல்யாணி சுரேஷ் said...

மழை தரும் இசைக்கு சமமாய் வேறு இசை எதுவும் உண்டா என்ன? அருமையா இருக்கு.