Saturday, September 19, 2009

உனக்குத் தெரியாமல்

வரத்துடித்த
நொடி உணர்ந்து
சமாளித்து
உன்முன்
புன்னகை செய்து
எதையோ எடுப்பதுபோல்
சற்றுத் தள்ளிப்போய்
துடைக்கிறேன் கண்ணீரை
உனக்குத் தெரியாமல்

துடைத்த கண்ணீரிலிருந்து
பார்க்கின்றன
உன் விழிகள்
என்ன சொல்வதென்று
தெரியாமல்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

என்னை பார்ப்பது போல இருக்கிறது.