Tuesday, September 22, 2009

பார்க்காமல் போகிறீர்கள்

உங்கள் காலடியில்
ஒரு பென்சில் கிடக்கிறது
பார்க்காமல் போகிறீர்கள்

உங்கள் காலடியில்
ஒரு சாக்லெட் கிடக்கிறது
பார்க்காமல் போகிறீர்கள்

உங்கள் காலடியில்
ஒரு முகவரி
ஒரு வானவில்
ஒரு மலர்
பார்க்காமல் போகிறீர்கள்

உங்கள் காலடியில்
ஒரு பாதை
ஒரு கவிதை
ஒரு வானம்
ஒரு உயிர்
எதையும்
பார்க்காமல் போகிறீர்கள்

உங்கள் காலடியில்
நீங்கள் கிடக்கிறீர்கள்
பார்க்காமல் போகிறீர்கள்

6 comments:

பா.ராஜாராம் said...

உங்கள் ஆளுமை அசரடிக்கிறது சந்திரா!

ராஜா சந்திரசேகர் said...

நன்றியும் அன்பும் பாரா

கல்யாணி சுரேஷ் said...

பல இனிய விஷயங்கள் இப்படிதான் நம் பார்வையில் படாமல் போய்விடுகின்றன.

Sugirtha said...

ரொம்ப நல்லா இருக்கு ராஜா! அவசர உலகத்தையும், மனிதர்கள் மனதுக்குள் குடி கொண்டுவிட்ட ஒருவித அலட்சிய சுபாவத்தையும் அதன் விளைவையும் துல்லியமாக விளக்குவதாக படுகிறது இந்த கவிதை எனக்கு.

ராஜா சந்திரசேகர் said...

thanks kalyani.thanks sugi..how are you.

சமுத்ரா said...

nalla kavidhai