Saturday, September 19, 2009

குழந்தைகள்

கை நீட்டிச் சேமிக்கிறது
குழந்தையின் கையில்
குழந்தை மழை
---
பூக்களைக் கிள்ளி எறிகிறது குழந்தை
அம்மா பார்த்துத் திட்டுகிறாள்
பூப்போல் சிரிக்கிறது குழந்தை
---
அம்மாவின் புடவைக்குள்
ஒளிந்து கொண்ட குழந்தை
பேசிப்பார்க்கிறது
அம்மாவைப்போல
---

2 comments:

கல்யாணி சுரேஷ் said...

மழையை போல், பூவைப் போல் குழந்தையும் இனிமைதான் இல்லையா ராஜா.

ராஜா சந்திரசேகர் said...

kalyani nice comments.thanks