Tuesday, October 18, 2011

இல்லாத பழம்

இல்லாத பழத்தை எடுத்து
ஒவ்வொரு சுளையாய் உரித்து
தின்கிறாள் சிறுமி
இருக்கும் தன் பசிக்கு

பசியை வெற்றிகொள்ள
ஒவ்வொரு முறையும்
தோற்றுப் போகாத
இந்த பாவனையை
செய்தபடி இருக்கிறாள்

அப்பா வீடு திரும்ப
இன்னும் நேரமிருக்கிறது

2 comments:

J S Gnanasekar said...

ரசித்தேன்

ராஜா சந்திரசேகர் said...

நன்றி ஞானசேகர்.உங்கள் தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றி.