Wednesday, October 5, 2011

கோடுகள்

வெறும் கோடுகள் மட்டுமே
வரையத் தெரிந்தவனை
அவர்கள் ஓவியன் என்றார்கள்

பிறகு அவனை
வரையச் சொன்னார்கள்

கோடுகளுக்கிடையில்
ஓவியங்கள் இருக்கின்றன
பாருங்கள் என்றான்

அவர்கள் கோடுகளில்
தேடிக்கொண்டிருந்தார்கள்

அவன் கோடுகளில்
தாவிக் கொண்டிருந்தான்

No comments: