Monday, October 31, 2011

இருள் பிளந்து

கைபற்றி
ஒளிகாட்டிச் செல்லும்
மெழுகுவர்த்தியிடம் கேட்டேன்

போய் சேர்வதற்குள்
அணைந்து போவாயா

சுடரசைத்துச் சொன்னது

அதனாலென்ன

முதலில்
உன் பயம் அணை

ஒரு போதும் உருகாது
உன் சாலை
போய் சேர்
இருள் பிளந்து

No comments: