Saturday, October 22, 2011

சொல்லமாட்டேன்

1-

இமைகளுக்கிடையில் நீ
பூத்திருக்கிறாய்
இதை கண்ணீர் துளி என்று
சொல்லமாட்டேன்

2-

தேநீர் அருந்தியபடியே
மழையை ரசித்தேன்
பிறகு
மழையை அருந்தியபடியே
மழையை ரசித்தேன்

3-

உனது குறுஞ்செய்தியைப்
படிக்க ஒரு சுவை
தொட்டுப் பார்க்க
பல சுவை

4-

ஒன்றுமில்லாது தொடங்கும்
இந்த கவிதை
ஒன்றுமில்லாது
முடியப் போவதில்லை

1 comment:

மகேந்திரன் said...

ரசிக்க வைத்த குறுங்கவிதைகள்...