Wednesday, August 26, 2009

நான்கு கவிதைகள்

வண்ணங்கள் புன்னகைக்க
அழும் பெண் ஓவியத்தில்
கண்ணீரைத் தீட்டும் கலைஞன்
----
நீந்தத் தெரியாதவன்
பார்த்தபடி
நதி நீந்துவதை
---
இருட்டை உண்டு
கொழுக்கும் பயம்
கைப்பற்றப் பார்க்கும் பகலையும்
---
மரத்திலிருந்து
உதிர்கிறது பூ
மரத்தை சுமந்தபடி
---

1 comment:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நான்குமே அருமை சார்!

மிகவும் ரசித்தேன்

-ப்ரியமுடன்
சேரல்