Wednesday, July 22, 2009

புறாக்கள்

எங்களுக்கெல்லாம் வராத புறாக்கள்
தாத்தாவுக்கு மட்டும்
ஓடி வரும்
அருகில் வந்து தின்னும்
நாங்கள் கேட்டபோது
சொன்னார் தாத்தா
அடுத்த முறை தானியத்தில்
அன்பைத் தடவி
போட்டுப் பாருங்கள் என்று

3 comments:

na.jothi said...

அருமையான கவிதை

புறாக்களுக்கு மட்டுமல்ல
எல்லா ஜீவராசிகளிடமும்
அன்புடன் இருத்தல் வேண்டும்

rvelkannan said...

முன்பு
கண்ணாடியின் துணை இல்லாமல்
பார்த்தவர் தானே
அன்பால்
புறாக்கள் மட்டும் அல்ல
இவுலகமே அவரிடத்தில்

ராஜா சந்திரசேகர் said...

ஜெ...நன்றி.
வேல்கண்ணன் உங்களின் தொடர்ந்த வாசிப்புக்கும் கவனிப்புக்கும் நன்றி.