Friday, December 30, 2011

முடிந்த பிறகும்

1-

காதலில்லாமல்
பேசிச் செல்வாயா
கேட்கிறாய்

மழையிடம்
நனையாமல்
அழைத்துச் செல்வாயா
என்று கேட்பது
போலிருக்கிறது

2-

எதுவுமில்லாத
என்னிடமிருந்து
எல்லாம் எப்படி
பெற்றாய் நீ

3-


மழையைப் போல்
சிரிக்கிறாய்
அன்பிம் ஈரம்

4-

உரையாடல்
முடிந்த பிறகும்
கேட்டுக்கொண்டே இருந்தது
உன் குரல்

No comments: