Saturday, December 10, 2011

பூவை வரைதல்

எதுவும் பேசாமல்
ஒரு பூவை வரைந்து
என் கையில்
கொடுத்துவிட்டுப் போகிறாய்

மெல்ல அது
வாசம் வீசத்
தொடங்குகிறது

ஆச்சர்யத்துடன் பார்க்க
பூந்தோட்டமாகிறது

சுற்றி ஓடுகிறேன்
ஓய்வின்றி

தேன் ருசிக்கிறேன்
எல்லையின்றி

No comments: