Wednesday, December 28, 2011

இந்த வரிகள்

அடிக்கடி கார்துடைத்து
கை நீட்டாமல்
தருவதை வாங்கிப்போகும் சிறுவனை
சிக்னலில் நிற்கும் கணங்களில்
கவனித்திருக்கிறேன்

எனக்கும்
தாய் தந்தை உண்டு
எங்கிருக்கிறார்கள்
என்ன ஆனார்கள் என்று
தெரியாது

அவன் வந்துபோகும்
ஒவ்வொரு முறையும்
இந்த வரிகளும்
வந்துபோவதுண்டு

No comments: