Saturday, December 10, 2011

உன் கனவிலிருந்து

நம் பேச்சுக்கிடையில்
வந்து போகும்
பட்டாம் பூச்சி
என் கனவிலும்
வந்தது

எங்கிருந்து
வருகிறாய் என்றேன்

உன் கனவிலிருந்து
என்றது

எனக்கென்ன
கொண்டு வந்தாய்
எனக் கேட்டேன்

கேள்வியைத் தட்டி விட்டு
கொஞ்சம்
வண்ணம் இறைத்தபடியே
ஓடிப் போனது