Thursday, March 3, 2011

இப்போது

நட்பை
முறித்துக்கொண்டுபோன
நண்பனுக்கு
இன்று பிறந்த நாள்

அவனுக்காக
நான் எழுதிய
வாழ்த்து அட்டை
மேஜைமேல்

படிக்கிறேன்
அவன் வாங்கி
படிப்பதைப்போன்று

உதிரும் இந்த
கண்ணீர் துளிக்கு
எதுவும் தெரியாது
என்பது மட்டுமே
இப்போது
எனக்குத் தெரியும்

2 comments:

sathishsangkavi.blogspot.com said...

//
உதிரும் இந்த
கண்ணீர் துளிக்கு
எதுவும் தெரியாது
என்பது மட்டுமே
இப்போது
எனக்குத் தெரியும் //

உண்மையான வரிகள்...

ராஜா சந்திரசேகர் said...

நன்றி சங்கவி!...