Friday, February 25, 2011

மூதாட்டி

யார் துணையுமின்றி
கைத்தடியால் தன்னை
அழைத்தபடி
கவனமாய்த் தண்டவாளத்தைக்
கடந்து விடுகிறாள் மூதாட்டி

தொடர்ந்து செல்லும்
ரயிலிலும்
பயணிக்கிறாள்
தன்னைப் பார்த்து
கையசைத்தபடி

No comments: