Saturday, February 12, 2011

மீதி வரிகள்

1-

தனியே அருந்தும் தேநீர்
நினைவில் வந்து
சுவையூட்டும் நண்பர்

2-

உறக்கம் போக்கும்
கனவை கைப்பற்றுங்கள்
உறக்கம் சேர்க்கும்
கனவை கைவிடுங்கள்

3-

கிடைத்த வரியில்
கிடைக்கலாம்
மீதி வரிகள்

4-

சாகும்வரை பாட்டி
மரணம் பற்றிய கதையை
சொன்னதே இல்லை

5-

பகலின் தனிமை
இரவில் விடுபடும்
கனவுகள் மூலம்

6-

உழைப்பே
உண்மையான மொழி
மற்றதெல்லாம்
தேவையற்ற எழுத்துக்கள்

No comments: