Tuesday, March 23, 2010

தொலைந்த பாதைகள்

எழுதியதை
திருத்தச் சொல்கிறாய்
திருத்தியதை
கிழிக்கச் சொல்கிறாய்
இதையே திரும்ப திரும்ப
செய்யச் சொல்கிறாய்

எனக்கும் எழுத்துக்கும்
இடையில்
தொலைந்த பாதைகளைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
உன் கைபிடித்தபடி

No comments: