Monday, February 9, 2009

விடுமுறையும் ஊரும்

விடுமுறைக்கு ஊர் வந்து
விடுமுறை ரத்து செய்யப்பட்டு
அவசரமாய் கிளம்பியபோது
அப்பா சொன்னார்
இதுக்கு நீ வராமயே
இருந்திருக்கலாம்
பதில் சொல்லாமல் திரும்பிய
என்னால் ஏமார்ந்திருக்கும்
ஊரும்

1 comment:

Sugirtha said...

யதார்த்தம்.
புத்திக்கு புரிகிறது, மனதுக்கோ வலிக்கிறது...