Saturday, April 17, 2010

சில வரிகள்

சந்தை தொலையாது
மகளும் தொலைய மாட்டாள்
தேடுகிறாள் தாய்
---------------
பேசிக்கொண்டே இருந்த பெண்
நிறுத்திய பிறகும்
பேசுவது போலவே தெரிந்தாள்
---------------
மீனே
கடல் பற்றிய
ஒரு ரகசியம் சொல்
உன்னைக் கடலில்
விட்டு விடுகிறேன்
------------
இல்லாவிட்டால் என்ன
விரல் கழுத்தில் ஊர்ந்து
உணரும் நகையை
-------------

1 comment:

ராமலக்ஷ்மி said...

எல்லா வரிகளுமே பிடித்தன.