Sunday, October 25, 2009

எவ்வளவோ தெரியுது

அப்பாவும் மகனும்
பார்த்துக் கொண்டிருந்தனர்

தந்தை திரும்ப திரும்ப
சொன்னார்
இங்கிருந்து பார் என்று

ஆச்சர்யத்தை நிறுத்தி
அப்பா சொன்னபடி செய்தான்

பிறகு சொன்னான்

அப்பா நீங்க சொன்னபடி பாத்தா
எனக்கு நீங்கதான் தெரியிறீங்க
என்படி பாத்தா
எவ்வளவோ தெரியுது