Wednesday, February 19, 2014

வெட்கத்தால் வரைந்து பார்க்கிறேன்

1-
நூல் பிடித்தது போல் 
உன்னால் 
பேசிவிட முடிகிறது
எனக்குத்தான் 
பட்டம் போல் 
அலைபாய்கிறது

2-
என் தனிமைக்கு 
உன் நினைவுகள் போதும் 
எனக்கு 
எந்த மது போதாது 

3-
போகச் சொல்கிறாய்
வழி 
நீளமாகி விட்டது

4-
உனக்குத் தரப்போகும் 
முத்தத்தை வெட்கத்தால் 
வரைந்து பார்க்கிறேன்

5-
கால் நனைக்கும் 
அலை போல 
உன் மனம் நனைக்கும் 
என் பிரியம்

6-
கடலை ஒரு துளியாக்கி 
அதை உன் கண்ணில் 
ததும்பச் செய்கிறாய்




2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தையும் ரசித்தேன் ஐயா... 4, 6 மிகவும் கவர்ந்தது...

Anonymous said...

வணக்ம்
கவிதை அருமையாக உள்ளது ரசித்தேன்...
வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-