Tuesday, February 21, 2012

தொலைதூரம்

உன் முகம்
என் கவிதையின்
ஒரு வரியை
ஞாபகத்திற்கு கொண்டு வந்தது
கவிதையைத் தேடி
நான் போக
நீ போயிருந்தாய்
தொலைதூரம்
என் திசைகளுக்கு
எட்டாமல்