Friday, February 3, 2012

மெளனத்தில் செய்த அகராதி

1-

உன் மெளனத்தில்
நான் செய்த
அகராதியில்
மொழி முகம் பார்க்கிறது

2-

உன் குரலை
சேமித்து வைத்திருந்த
ஒலி நாடாவைத்
தொலைத்து விட்டேன்
நல்லவேளை
நினைவு நாடாவில்
ஓடிக்கொண்டிருக்கிறாய்
நீங்காத இசையாய்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

//உன் குரலை
சேமித்து வைத்திருந்த
ஒலி நாடாவைத்
தொலைத்து விட்டேன்
நல்லவேளை
நினைவு நாடாவில்
ஓடிக்கொண்டிருக்கிறாய்
நீங்காத இசையாய்//
அருமை