Monday, August 30, 2010

மழைச் சிறுமி

பள்ளிக்கூட மணி அடிக்க
மழை பெய்தது
எல்லோரும் ஓடினர்
ஒரு சிறுமி
மெதுவாக
மிக மெதுவாக
எடுத்துக் கொண்டிருந்தாள்
விழுந்த புத்தகங்களோடு
மழைத்துளிகளையும்

3 comments:

vinthaimanithan said...

வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் வார்த்தைகளைக் கொண்டு அழகாக நெய்திருக்கிறீர்கள்! அழகு!

ராஜா சந்திரசேகர் said...

நன்றி ராஜாராமன்.

கல்யாணி சுரேஷ் said...

மழைத்துளிகளோடு எங்கள் மனதினையும் கூட....