Sunday, July 11, 2010

நண்பனின் மரணம்

நண்பனுக்காக
காத்துக்கிடக்கிறேன்
நிரப்பப்பட்ட
மதுக்கோப்பைகளுடன்

வந்தவுடன்
வா நீர் ஞானம்
அடையலாம் என்று
தொடங்கி விடுவான்

போதையின் மேல்
அவன் ஏறிப்போகும் போது
செய்யும் ரகளைகள்
ரசிக்கும்படி இருக்கும்

செய்தி வருகிறது
அவன் விபத்தில்
இறந்து விட்டான் என்று

கிளம்புகிறேன்
அவன் மதுவையும்
சேர்த்து குடித்துவிட்டு

நெஞ்சுக்குள்
இறங்கிக் கொண்டிருக்கிறது
அவன் மரணம்
அமிலமாய்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

படிப்பவர்களையும் தழுவிக் கொள்கிறது ஒரு சோகம்.