Thursday, May 27, 2010

அமைதியை வரைதல்

1-

ஓவியன் அறை
காலை ஒளி வரைகிறது
அமைதியை

2-

வீசும் வலையை
ரசிக்கும் மீன்கள்
பிடிபடப்போவது தெரியாமல்

3-

சிறுமி பாதம் பதிந்த மண்
வரவேண்டாம் என்கிறது
கடலை

4-

எல்லோரும் அவரவர்
நிலவைப் பார்க்கிறார்கள்
ஒரே நிலவில்

5-

தன் புல்லாங்குழலால்
மழையோடு சண்டையிட்டு
போகும் வழிப்போக்கன்

6-

இருளில் நிகழும் தாம்பத்யம்
சத்தமற்று
சத்தத்துடன்

2 comments:

பத்மா said...

எல்லோரும் அவரவர்
நிலவைப் பார்க்கிறார்கள்
ஒரே நிலவில்

ஆம் ஆம் .என்ன ஒரு உண்மை

ராஜா சந்திரசேகர் said...

நன்றி பத்மா.