Saturday, May 8, 2010

முதல் நன்றி

மேகங்களில் நீந்தும் மழை
விழுகிறது
மீன்களாக
---

மெழுகுவர்த்தியின்
திரி நிழல்
கிறுக்குகிறது சுவரில்
---

புன்னகையுடன்
நன்றி சொல்லும்போது
முதல் நன்றியாகிறது
புன்னகை
---

சேர்ந்து போயிருக்க்கும் பசி
ஒற்றை வாழைப்பழத்தில்
தீர்த்துக்கொள்ள பார்க்கும் பைத்தியக்காரன்
---

4 comments:

பத்மா said...

மெழுகுவர்த்தியின்
திரி நிழல்
கிறுக்குகிறது சுவரில்
---

ஆஹா அழகிய கிறுக்கல்

திருநாவுக்கரசு பழனிசாமி said...

//மேகங்களில் நீந்தும் மழை
விழுகிறது
மீன்களாக//

excellent one....

ராஜா சந்திரசேகர் said...

நன்றி பத்மா,திருநாவுக்கரசு பழனிசாமி.

கல்யாணி சுரேஷ் said...

//புன்னகையுடன்
நன்றி சொல்லும்போது
முதல் நன்றியாகிறது
புன்னகை//

Nice Raajaa.