Sunday, May 31, 2009

மூன்றாவது நபர்

ஒரே ரயிலில்
பயணித்தபடி
நீயும் நானும்
எத்தனையோ முறை
பேசி இருக்கிறோம்

நம் மெளனத்தின் போதெல்லாம்
ரயில் சத்தம்
மூன்றாவது நபராக
உரையாடலில்
கலந்து கொண்டிருக்கிறது

இப்போதும்
ரயில் வருகிறது
உன் நினைவில்
என் கனவில்

எந்த ரயிலுக்கும்
தெரியவில்லை
நம்மை
நாம் பேசியதை

2 comments:

மயாதி said...

simply superb

Sugirtha said...

நம் மெளனத்தின் போதெல்லாம்
ரயில் சத்தம்
மூன்றாவது நபராக

I liked these lines.