Tuesday, October 19, 2010

உனது பதிவுகள்

1-

நீ பிறந்த நாளின்று
நான் ரத்தம் கொடுத்தபடியே
உனக்கான கவிதையை
யோசித்துக்கொண்டிருக்கிறேன்

2-

நம் அருகில் அமர்ந்திருந்த
பார்வையற்ற தோழர்
சொல்லிச் செல்கிறார்

என்னால் உங்கள் காதலைப்
பார்க்க முடிகிறது

3-

இனிப்பை விட்டுவிட்டு
உன் பெயரை
இழுத்துப் போகின்றன
எறும்புகள்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

1.
அன்புக்குரியவர்களின் பிறந்த நாளுக்கு இதைவிட அருமையான பரிசு எதுவுமே இல்லை.

2.
மிகவும் கண்ணியமான அந்த காதல் மரியாதைக்குரியது.

3.
பெயரே அத்தனை இனிமையானதா, அப்போ அவங்க.....?