தங்கையின் கண்ணோரம்
கசிந்த துளியை
அண்ணன்தான்
கவனித்துப் பார்த்தார்
பின்னாளில் சொன்னார்
அந்த கண்ணீர்
தங்கையின்
வலியை
வருத்தத்தை
வாழ்க்கையை
குழந்தைகளை
எல்லாம் சொன்னதாக
தங்கைக்கு நிகழப்போகும்
மரணம் பற்றி
சொன்னதை
கடைசி வரை
சொல்லவே இல்லை
(எங்களை விட்டு மறைந்துபோன
தங்கை அமுதாவின் நினைவிற்கு)
Saturday, January 29, 2011
Wednesday, January 26, 2011
மூன்று கவிதைகள்
அம்மா கூப்பிட
ஓடியது குழந்தை
சொர்க்கத்தை நிரப்பிவிட்டு
----------
வியூகம்
அமைத்த பின்பே வேட்டை
சில நேரம்
சிக்கிவிடுகின்றன
வியூகத்திலேயே
-----------
உனக்கென்ன
இறைத்துவிட்டுப் போகிறாய்
அடுக்கிவைப்பதற்குள்
போய்விடுகிறது
என் பொழுது
-----------
ஓடியது குழந்தை
சொர்க்கத்தை நிரப்பிவிட்டு
----------
வியூகம்
அமைத்த பின்பே வேட்டை
சில நேரம்
சிக்கிவிடுகின்றன
வியூகத்திலேயே
-----------
உனக்கென்ன
இறைத்துவிட்டுப் போகிறாய்
அடுக்கிவைப்பதற்குள்
போய்விடுகிறது
என் பொழுது
-----------
Monday, January 24, 2011
நமக்குள்
நீ தொட்ட
அந்த இடம்
இதமாக இருக்கிறது என்றேன்
தொடவே இல்லை என்றாய்
நீ தொடப்போகும்
அந்த இடம்
இதமாக இருக்கும்
என்பதைதான்
அப்படிச் சொன்னேன் என்றேன்
விளையாட்டாக அடிக்கிறாய்
பின் தொடுகிறாய்
காதலையும்
அந்த இடம்
இதமாக இருக்கிறது என்றேன்
தொடவே இல்லை என்றாய்
நீ தொடப்போகும்
அந்த இடம்
இதமாக இருக்கும்
என்பதைதான்
அப்படிச் சொன்னேன் என்றேன்
விளையாட்டாக அடிக்கிறாய்
பின் தொடுகிறாய்
காதலையும்
எல்லைகள்
எப்போது கூப்பிட்டாலும்
தொடர்பு எல்லைக்கு
வெளியிலேயே இருக்கிறாய்
எல்லைகளற்றது காதல்
என நீ சொன்ன
வரிக்குள் நுழைந்து
தேடுகிறேன் உன்னை
தொடர்பு எல்லைக்கு
வெளியிலேயே இருக்கிறாய்
எல்லைகளற்றது காதல்
என நீ சொன்ன
வரிக்குள் நுழைந்து
தேடுகிறேன் உன்னை
வார்த்தை
அந்த வார்த்தை வேண்டுமா
என்று திரும்ப திரும்ப
யோசித்து
முடிவுக்கு வந்தேன்
கவிதையே
வேண்டாமென்று
என்று திரும்ப திரும்ப
யோசித்து
முடிவுக்கு வந்தேன்
கவிதையே
வேண்டாமென்று




