Tuesday, September 30, 2014

மூன்று கவிதைகள்

1-
ஆழ்மனதில் 
அடித்த அலை 
கடலாகிப் போச்சு

2-
சொல்லக் கதைகள் 
இருக்கின்றன
சொற்களில்தான் 
கோர்க்கத் தெரியவில்லை

3-
வெயில் போல் 
புன்னகைக்கிறாய் 
மழைப் பெய்கிறது

இருக்கிறது

உன் கண்களில் 
அன்பு இருக்கிறது
உன் பார்வையில் 
தாய்மை இருக்கிறது

சொற்கள் இருந்தன

நாம் விடை பெற்ற 
பிறகும் 
பேச 
சொற்கள் இருந்தன 
கண்ணீரில்